Saturday, June 11, 2022

ஞான பண்டிதா முருகா பால குமரனே

 ஞான பண்டிதா முருகா பால குமரனே

உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள்கொடு
விழிதிறக்குமே முருகா ஒளிபிறக்குமே
வலிபறக்குமே முருகா வழிகிடைக்குமே

வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
கால்பிடிப்பவர் கவலைக் களையெடுப்பவன்
நீயிருக்கையில் இந்த நிலையும் நியாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி வீழுமோ

பால்கொடுத்தவள் முருகா பாசம் கேட்கிறாள்
பாலகா குகா மடியில் சேர்க்கப் பார்க்கிறாள்
அன்பு சிவனவன் முருகா கோபம் கொள்கிறான்
நீல கண்டனின் மகனே நியலில் சேரவா

பிறைகள் இல்லையேல் முருகா நிலவு ஏதடா 
குறைகள் உள்ளது மனித உறவு தானடா
நிறைந்து வையுமென் நெஞ்சம் முழுதும் நீயடா  
நீஎன் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா  

காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்  
ஏற்றுக் கொள்ளடா எந்தாய் இளைய வள்தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்  
போற்றும் தெய்வமே புனிதா புரிந்து கொள்ளடா

Friday, October 6, 2017

எங்கே தேடுவேன்?

படம்: பணம்
பாடல்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன், இராமமூர்த்தி
பாடியவர்: என்.எஸ்.கிருஷ்ணன்
ஆண்டு: 1952

எங்கே தேடுவேன் 
எங்கே தேடுவேன்? - பணத்தை 
எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணத்தை 
எங்கே தேடுவேன்?

அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?

கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் - பணத்தை
எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?

சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ? 

எங்கே தேடுவேன்? - பணத்தை 
எங்கே தேடுவேன்? 

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலைக் குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் - பணத்தை
எங்கே தேடுவேன்

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ? 

எங்கே தேடுவேன் 
எங்கே தேடுவேன்? - பணத்தை 
எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே பணமே!

Tuesday, September 26, 2017

ஆத்தங்கர மரமே!

படம் : கிழக்குச் சீமையிலே
பாடல்: வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் : மனோ, சுஜாதா
ஆண்டு: 1993

அத்தைக்குப் பிறந்தவளே! ஆளாகி நின்றவளே!
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே!
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ?
மூன்றாம் பிறையே! நீ முழுநிலவு ஆனதெப்போ?
மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ?

ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!

ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!

ஓடக்கரை உழவு காத்துல ஒருத்தி 
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா?
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா?

உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது - அட 
ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!

மாமனே! உன்னத் தாங்காம 
வட்டியில் சோறு உங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே!

காகங்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே!

ஒத்தையில் ஓடக்கரையோரம் 
கத்தியே உன்பேர் சொன்னேனே!
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் 
கத்தியே உன்பேர் சொன்னேனே!
அந்த ரயில் தூரம் போனதும் 
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே!

முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என் 
ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!

தாவணிப் பொண்ணே சொகந்தானா?
தங்கமே தழும்பும் சொகந்தானா?
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா?

தொட்ட பூ எல்லாம் சொகந்தானா?
தொடாத பூவும் சொகந்தானா?
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா?

அயித்தையும் மாமனும் சொகந்தானா?
ஆத்துல மீனும் சொகந்தானா?
அயித்தையும் மாமனும் சொகந்தானா?
ஆத்துல மீனும் சொகந்தானா?

அன்னமே! 
உன்னயும் என்னையும் தூக்கி வளர்த்த 
திண்ணையும் சொகந்தானா?

மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - உன் 
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!

ஓடக்கரை உழவு காத்துல ஒருத்தி 
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி 
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது - அட 
ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!

Monday, September 25, 2017

ஓடக்கார மாரிமுத்து

படம்: இந்திரா
வரிகள்: வைரமுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சீர்காழி கோ.சிவசிதம்பரம்
ஆண்டு: 1995

ஏ 
ஓடக்கார மாரிமுத்து 
ஓட்டை வாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க 
சௌக்கியமா

ஏ 
அரிசிக்கடை ஐயாவுப் பொண்ணு 
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு 
சௌக்கியமா

பழைய பாக்கி இருக்குதா 
பையன் மனசு துடிக்குதா

பட்டணத்து ஸ்டைலக் கண்டா 
பட்டிக்காடு கசந்திடுமா

பள்ளிக்கூட நெனப்பிருக்கே 
பாவி மனம் மறந்திடுமா

பட்டுப் பாவடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்டை ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது

(ஓடக்கார..)

குண்டுப் பொண்ணு கோமள வள்ளி 
என்னானா என்னானா
ரெட்டைப் புள்ள பொறந்ததுமே 
நூலானா நூலானா

குள்ள வாத்து டீச்சர் கனகா - ஐயோ 
பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா 
மேற்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூனு மார்க்கில் 
ஃபெயிலானா ஃபெயிலானா

ஒள்ளிக்குச்சி ராஜ மீனா 
ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் 
திரும்பி வந்தாளே

(ஏ ஓடக்கார...)

அம்மன் கோயில் வேப்பமரம் 
என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல 
ரெண்டாச்சு ரெண்டாச்சு

மேலத்தெரு கருப்பையாவும் 
கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூளையில 
ஜோடி சேர்ந்த கதை என்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் 
வந்தாச்சு வந்தாச்சு

மத்த கதை எனக்கெதுக்கு 
எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லும் குருவி இன்னிக்கு 
தாவணி போட்டிருக்கு

(ஏ ஓடக்கார..)

மானூத்து மந்தையில

படம்: கிழக்குச் சீமையிலே
பாடல்: வைரமுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்பிரமணியம், சசிரேகா
ஆண்டு: 1993

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூஉங் குயிலே

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி- அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

மேலு காலு வலிச்சா வெள்ளப் பூண்டு உரிச்சி
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு - மச்சான 
ஈரத்துணி கட்டி இருக்கச் சொல்லு

Tuesday, September 19, 2017

விழிகளின் அருகினில்...

படம்: அழகிய தீயே
பாடல்: 
இசை: இரமேஷ் விநாயகம்
பாடியவர்:  இரமேஷ் விநாயகம்
ஆண்டு: 2004

விழிகளின் அருகினில் வானம் - வெகு 
தொலைவினில் தொலைவினில் தூக்கம் - இது 
ஐந்து புலன்களின் ஏக்கம் - என் 
முதன்முதல் அனுபவம் ஓ ஏ

ஒலியின்றி உதடுகள் பேசும் - பெரும் 
புயலென வெளிவரும் சுவாசம் - ஒரு 
சுவடின்றி நடந்திடும் பாதம் - இது 
அதிசய அனுபவம் ஓ ஏ

பெண்ணைச் சந்தித்தேன் - அவள் 
நட்பை யாசித்தேன் - அவள் 
பண்பை நேசித்தேன் - வேறு
என்ன நான் சொல்ல ஓ ஏ

பூப்போன்ற கன்னித்தேன் - அவள் 
பேர் சொல்லி தித்தித்தேன் - அது 
ஏன் என்று யோசித்தேன் - அட 
நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள் - இசை 
வார்க்கின்ற நேரங்கள் - பசி 
நீர் தூக்கம் இல்லாமல் - உயிர் 
வாழ்கின்ற மாயங்கள்

அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய்ச் செயல்படுதே

விழி 
காண முடியாத மாற்றம் - அதை 
மூடி மறைக்கின்ற தோற்றம் - ஒரு 
மெளனப் புயல் வீசுதே - அதில் 
மனம் தட்டு தடுமாறும் ஓ ஏ

பூவில் என்ன புத்தம்புது வாசம்
தென்றல்கூட சங்கீத மாய் வீசும்
ஏதோ வந்து பன்னீர்மழை தூவும்
யாரோ என்று எங்கோ மனம் தேடும்

கேட்காத ஓசைகள் - இதழ் 
தாண்டாத வார்த்தைகள் - இமை 
ஆடாத பார்வைகள் - இவை 
நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம் - இல்லை 
நில் என்னும் ஓர் நெஞ்சம் - எதிர்
பார்க்காமல் என் வாழ்வில் - ஒரு 
போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா
துடிப்பதுபோல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய்த் தவித்திடவா

ஒரு 
பெண்ணின் நினைவென்ன செய்யும் - எனைக் 
கத்தி இல்லாமல் கொய்யும் - இதில் 
மீள வழி உள்ளதே - இருப்பினும் 
உள்ளம் விரும்பாது ஓ ஏ

(விழிகளின் அருகினில் வானம்)

Monday, September 18, 2017

யமுனை யாற்றிலே

படம் : தளபதி (1991)
பாடல் : வாலி
இசை : இளையராஜா
பாடியவர் : K.S.சித்ரா 

யமுனை யாற்றிலே ஈரக் காற்றிலே
கண்ண னோடுதா னாட
பார்வை பூத்திடப் பாதை பார்த்திடப்
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்ன னில்லையே கூட
இளைய கன்னியின் இமைத்தி டாதகண்
இங்கு மங்குமே தேட
ஆயர் பாடியில் கண்ண னில்லையோ
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா

Thursday, September 14, 2017

ஆத்துக்குப் பக்கம் ஆத்துக்குப் பக்கம்...

படம் : நாடோடிக் காதல் (வெளிவரவில்லை)
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ இயேசுதாஸ், ஸ்வர்ணலதா
ஆண்டு : 1990-1991

ஏழைமக வீட்டுக்குள்ள இளம்பிறையா வந்தவனே!  
வாழையடி வாழையென வளர்ந்து வரும் சந்திரனே!

பால்வடியும் பூமுகத்தில் நீர் வடியக் கூடாது 
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா பெத்தமனம் தாங்காது 

கண்மணியே! கண்மணியே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
ஆயீஇ

ஆத்துக்குப் பக்கம் ஆத்துக்குப் பக்கம் 
ஆத்து சொரக்குற ஊத்துக்குப் பக்கம் 
யாரோ வச்ச தென்ன - இது 
நம்பீஇருக்குது மண்ண  - இது 
தானாக வளர்ந்த  மரம் பாரம்மா - ஒரு 
தாய் யாரு தந்தை யாரு கூறம்மா

(ஆத்துக்கு)

ஆண்டவனும் நானும் இங்கு அண்ணன் தம்பி கேளு புள்ள
அவனுக்கும் என்னைப் போல அப்பா அம்மா யாரு மில்ல                      

ஆண்டவனும் நானும் இங்கு அண்ணன் தம்பி கேளு புள்ள
அவனுக்கும் என்னைப் போல அப்பா அம்மா யாரு மில்ல                      

ஓடும் நதி ஒருத்தனுக்குச் சொந்தம் இல்லை அம்மா 
ஓடும் நதி ஒருத்தனுக்குச் சொந்தம் இல்லை அம்மா  - இங்கு 

ஓட்டைக் கூரை வீட்டுக் காரன் சொந்த மெல்லாம் சும்மா 
ஓட்டைக் கூரை வீட்டுக் காரன் சொந்த மெல்லாம் சும்மா

(ஆத்துக்கு)

ஏஎ ஏஎ ஏஎ ஏஎ
சின்னமணிக் காளை - நீ
முன்னே றித்தான் போடா
நம்ம ஊரும் வந்தாச்சு
ஓடக் கரையைக் கண்டாச்சு
காடு கரை கழனி வெளஞ்சது 
ஓய்

வாலிபத்தின் கடனைத் தீர்க்கத் தாலி ஒன்னு அப்பன் தந்தான் 
தாலிபட்ட கடனைத் தீர்க்கத் தாயார் என்னை பெத்துப் புட்டா 

வாலிபத்தின் கடனைத் தீர்க்கத் தாலி ஒன்னு அப்பன் தந்தான் 
தாலிபட்ட கடனைத் தீர்க்கத் தாயார் என்னை பெத்துப் புட்டா 

நம்மைச் சுமக்கும் பூமியும்  ஒருகணக்கு போட்டு இருக்குது 
நம்மைச் சுமக்கும் பூமியும்  ஒருகணக்கு போட்டு இருக்குது 

நாளை வாங்கும் வரவுக்கு அது இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு அது இன்று நம்மை சுமக்குது

(ஆத்துக்கு)

நான் ஏரிக்கரை மேலிருந்து...

படம்: சின்ன தாயி
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா
ஆண்டு: 1992

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல

என் 
தெம்மாங்குப் பாட்டைக் கேட்டுத் தென்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே - நான் 
உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் 
மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்குக் காத்திருந்தேன் காணல - அட 
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல

நான் 
மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்குக் காத்திருந்தேன் காணல - அட 
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல

என் 
தெம்மாங்குப் பாட்டைக் கேட்டுத் தென்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே - நான் 
உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சுத்
தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்குக்கரை ஓரந்தான் 
தாழப் பறந்துவரும் மேகந்தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்டக் கூறதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்தக் காலில் நின்னேனே
தென்னாரைக் கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணாலம் காட்சி எப்போது? 
எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் 
மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல

மாமன் நெனப்பில் சின்ன தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான்கை பட்டாக்கா மூச்சூதும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ

கையேந்தும் ஆட்டுக் குட்டி கன்னிப் பெண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணைக் காட்டி மையல் தீரப் பேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சு உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் 
தெம்மாங்குப் பாட்டைக் கேட்டுத் தென்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே - நான் 
உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - அட 
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான தோணல

Friday, July 18, 2014

காதல் தேவதையே

படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள் : SP பாலசுப்பிரமணியம், ஜானகி
ஆண்டு : 1980

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ்மகனின் பொன்னே சிலையே               (ஜெர்மனியின்)


காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்                                             (ஜெர்மனியின்)


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே


காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்                                                    (சித்திரமே..)


பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடுநீ - இனி
எந்நாளுமே கொண்டாடலாம்


குளிர்நிலவின் ஒளிநீயே
எனதன்பின் சுடர் நீயே

சுகம் நூறாக வேண்டும்

உன்தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்                         (ஜெர்மனியின்)


பேரின்பமே என்றாலென்ன - அதை
நீஎன்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீஎன்னிடம் தந்தாலென்ன


எனைஅணைத்தே கதைசொல்ல
அதைச்சொல்வேன் சுவையாக


வெகுநாளாக ஆசை
என்மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்                           
(சித்திரமே) 

(ஜெர்மனியின்)

Sunday, July 6, 2014

சின்ன சின்ன ரோஜாப் பூவே

படம் : பூவிழி வாசலிலே
இசை : இளையராஜா
பாடியவர் : KJ இயேசுதாஸ்
ஆண்டு : 1987

சின்ன சின்ன ரோஜாப் பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு
சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக் கொள்ளத் தாயும் இல்லை


ஏனோ சோதனை - இள
நெஞ்சில் வேதனை                                    (சின்ன சின்ன)


சின்ன பிஞ்சு நெஞ்சுக் குள்ளே
என்ன என்ன ஆசை யுண்டோ
உள்ளம் தன்னை மூடி வைத்த
தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை


நீயும் இனி நானும்
ஒரு ஜீவன் தானடா


சோலைக் கிளி போலே
என் தோளில் ஆடடா


இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்                           (சின்ன சின்ன)


கண்ணில் உன்னைக் காணும் போது
எண்ணம் எங்கோ போகு தையா
என்னை விட்டுப் போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்த தென்று எண்ணு கின்றேன்
வாழ்த்து சொல்லிப் பாடு கின்றேன்


கங்கை நீ என்றால்
கரை இங்கு நானடா


வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா


என் வாழ்வில் நிம்மதி - அது 
உந்தன் சன்னதி                                         (சின்ன சின்ன)

Friday, February 28, 2014

ஒன்றானவன்

படம்: திருவிளையாடல்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

ஒன்றானவன் 
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரஸ வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவான்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன் - அன்பின்
ஒளியாகி நின்றானவன்

Friday, August 30, 2013

ஏழுமலையான்

பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணம் கருணை நம்மை மகிழவைத்தது



ஒருபிடி அவல்கொடுத்தே குசேலன் உறவுகொண்டான்
ஓடத்தில் ஏற்றிவைத்தே குகன்உடன் பிறப்பானான்
தான்சுவைத்த பழங்களையே தந்தனள் தாய்சபரி
தருவதற் கொன்றுமில்லை தலைவனே எமையாதரி