படம் : கிழக்குச் சீமையிலே
பாடல்: வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் : மனோ, சுஜாதா
ஆண்டு: 1993
அத்தைக்குப் பிறந்தவளே! ஆளாகி நின்றவளே!
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே!
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ?
மூன்றாம் பிறையே! நீ முழுநிலவு ஆனதெப்போ?
மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ?
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
ஓடக்கரை உழவு காத்துல ஒருத்தி
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா?
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா?
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது - அட
ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
மாமனே! உன்னத் தாங்காம
வட்டியில் சோறு உங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே!
காகங்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே!
ஒத்தையில் ஓடக்கரையோரம்
கத்தியே உன்பேர் சொன்னேனே!
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே உன்பேர் சொன்னேனே!
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே!
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
தாவணிப் பொண்ணே சொகந்தானா?
தங்கமே தழும்பும் சொகந்தானா?
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா?
தொட்ட பூ எல்லாம் சொகந்தானா?
தொடாத பூவும் சொகந்தானா?
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா?
அயித்தையும் மாமனும் சொகந்தானா?
ஆத்துல மீனும் சொகந்தானா?
அயித்தையும் மாமனும் சொகந்தானா?
ஆத்துல மீனும் சொகந்தானா?
அன்னமே!
உன்னயும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா?
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - உன்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
ஓடக்கரை உழவு காத்துல ஒருத்தி
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது - அட
ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
பாடல்: வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் : மனோ, சுஜாதா
ஆண்டு: 1993
அத்தைக்குப் பிறந்தவளே! ஆளாகி நின்றவளே!
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே!
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ?
மூன்றாம் பிறையே! நீ முழுநிலவு ஆனதெப்போ?
மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ?
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
ஓடக்கரை உழவு காத்துல ஒருத்தி
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா?
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா?
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது - அட
ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
மாமனே! உன்னத் தாங்காம
வட்டியில் சோறு உங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே!
காகங்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே!
ஒத்தையில் ஓடக்கரையோரம்
கத்தியே உன்பேர் சொன்னேனே!
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே உன்பேர் சொன்னேனே!
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே!
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
தாவணிப் பொண்ணே சொகந்தானா?
தங்கமே தழும்பும் சொகந்தானா?
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா?
தொட்ட பூ எல்லாம் சொகந்தானா?
தொடாத பூவும் சொகந்தானா?
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா?
அயித்தையும் மாமனும் சொகந்தானா?
ஆத்துல மீனும் சொகந்தானா?
அயித்தையும் மாமனும் சொகந்தானா?
ஆத்துல மீனும் சொகந்தானா?
அன்னமே!
உன்னயும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா?
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - உன்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
ஓடக்கரை உழவு காத்துல ஒருத்தி
யாரு இவ வெடிச்சு நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது - அட
ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே! அரசமர இலையே!
ஆலமரக் கிளையே! அதில் உறங்கும் கிளியே!
No comments:
Post a Comment