Thursday, September 14, 2017

நான் ஏரிக்கரை மேலிருந்து...

படம்: சின்ன தாயி
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா
ஆண்டு: 1992

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல

என் 
தெம்மாங்குப் பாட்டைக் கேட்டுத் தென்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே - நான் 
உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் 
மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்குக் காத்திருந்தேன் காணல - அட 
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல

நான் 
மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்குக் காத்திருந்தேன் காணல - அட 
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல

என் 
தெம்மாங்குப் பாட்டைக் கேட்டுத் தென்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே - நான் 
உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சுத்
தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்குக்கரை ஓரந்தான் 
தாழப் பறந்துவரும் மேகந்தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்டக் கூறதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர ஒத்தக் காலில் நின்னேனே
தென்னாரைக் கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணாலம் காட்சி எப்போது? 
எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் 
மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல

மாமன் நெனப்பில் சின்ன தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான்கை பட்டாக்கா மூச்சூதும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ

கையேந்தும் ஆட்டுக் குட்டி கன்னிப் பெண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணைக் காட்டி மையல் தீரப் பேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சு உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - மணி 
ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

என் 
தெம்மாங்குப் பாட்டைக் கேட்டுத் தென்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையிலே - நான் 
உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் 
ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல - அட 
சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான தோணல

No comments:

Post a Comment