Thursday, September 14, 2017

ஆத்துக்குப் பக்கம் ஆத்துக்குப் பக்கம்...

படம் : நாடோடிக் காதல் (வெளிவரவில்லை)
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ இயேசுதாஸ், ஸ்வர்ணலதா
ஆண்டு : 1990-1991

ஏழைமக வீட்டுக்குள்ள இளம்பிறையா வந்தவனே!  
வாழையடி வாழையென வளர்ந்து வரும் சந்திரனே!

பால்வடியும் பூமுகத்தில் நீர் வடியக் கூடாது 
பாத்துப்புட்டா பாத்துப்புட்டா பெத்தமனம் தாங்காது 

கண்மணியே! கண்மணியே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
ஆயீஇ

ஆத்துக்குப் பக்கம் ஆத்துக்குப் பக்கம் 
ஆத்து சொரக்குற ஊத்துக்குப் பக்கம் 
யாரோ வச்ச தென்ன - இது 
நம்பீஇருக்குது மண்ண  - இது 
தானாக வளர்ந்த  மரம் பாரம்மா - ஒரு 
தாய் யாரு தந்தை யாரு கூறம்மா

(ஆத்துக்கு)

ஆண்டவனும் நானும் இங்கு அண்ணன் தம்பி கேளு புள்ள
அவனுக்கும் என்னைப் போல அப்பா அம்மா யாரு மில்ல                      

ஆண்டவனும் நானும் இங்கு அண்ணன் தம்பி கேளு புள்ள
அவனுக்கும் என்னைப் போல அப்பா அம்மா யாரு மில்ல                      

ஓடும் நதி ஒருத்தனுக்குச் சொந்தம் இல்லை அம்மா 
ஓடும் நதி ஒருத்தனுக்குச் சொந்தம் இல்லை அம்மா  - இங்கு 

ஓட்டைக் கூரை வீட்டுக் காரன் சொந்த மெல்லாம் சும்மா 
ஓட்டைக் கூரை வீட்டுக் காரன் சொந்த மெல்லாம் சும்மா

(ஆத்துக்கு)

ஏஎ ஏஎ ஏஎ ஏஎ
சின்னமணிக் காளை - நீ
முன்னே றித்தான் போடா
நம்ம ஊரும் வந்தாச்சு
ஓடக் கரையைக் கண்டாச்சு
காடு கரை கழனி வெளஞ்சது 
ஓய்

வாலிபத்தின் கடனைத் தீர்க்கத் தாலி ஒன்னு அப்பன் தந்தான் 
தாலிபட்ட கடனைத் தீர்க்கத் தாயார் என்னை பெத்துப் புட்டா 

வாலிபத்தின் கடனைத் தீர்க்கத் தாலி ஒன்னு அப்பன் தந்தான் 
தாலிபட்ட கடனைத் தீர்க்கத் தாயார் என்னை பெத்துப் புட்டா 

நம்மைச் சுமக்கும் பூமியும்  ஒருகணக்கு போட்டு இருக்குது 
நம்மைச் சுமக்கும் பூமியும்  ஒருகணக்கு போட்டு இருக்குது 

நாளை வாங்கும் வரவுக்கு அது இன்று நம்மை சுமக்குது
நாளை வாங்கும் வரவுக்கு அது இன்று நம்மை சுமக்குது

(ஆத்துக்கு)

No comments:

Post a Comment