Monday, September 25, 2017

மானூத்து மந்தையில

படம்: கிழக்குச் சீமையிலே
பாடல்: வைரமுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்பிரமணியம், சசிரேகா
ஆண்டு: 1993

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூஉங் குயிலே

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி- அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

மேலு காலு வலிச்சா வெள்ளப் பூண்டு உரிச்சி
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு - மச்சான 
ஈரத்துணி கட்டி இருக்கச் சொல்லு

No comments:

Post a Comment