Tuesday, September 19, 2017

விழிகளின் அருகினில்...

படம்: அழகிய தீயே
பாடல்: 
இசை: இரமேஷ் விநாயகம்
பாடியவர்:  இரமேஷ் விநாயகம்
ஆண்டு: 2004

விழிகளின் அருகினில் வானம் - வெகு 
தொலைவினில் தொலைவினில் தூக்கம் - இது 
ஐந்து புலன்களின் ஏக்கம் - என் 
முதன்முதல் அனுபவம் ஓ ஏ

ஒலியின்றி உதடுகள் பேசும் - பெரும் 
புயலென வெளிவரும் சுவாசம் - ஒரு 
சுவடின்றி நடந்திடும் பாதம் - இது 
அதிசய அனுபவம் ஓ ஏ

பெண்ணைச் சந்தித்தேன் - அவள் 
நட்பை யாசித்தேன் - அவள் 
பண்பை நேசித்தேன் - வேறு
என்ன நான் சொல்ல ஓ ஏ

பூப்போன்ற கன்னித்தேன் - அவள் 
பேர் சொல்லி தித்தித்தேன் - அது 
ஏன் என்று யோசித்தேன் - அட 
நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள் - இசை 
வார்க்கின்ற நேரங்கள் - பசி 
நீர் தூக்கம் இல்லாமல் - உயிர் 
வாழ்கின்ற மாயங்கள்

அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய்ச் செயல்படுதே

விழி 
காண முடியாத மாற்றம் - அதை 
மூடி மறைக்கின்ற தோற்றம் - ஒரு 
மெளனப் புயல் வீசுதே - அதில் 
மனம் தட்டு தடுமாறும் ஓ ஏ

பூவில் என்ன புத்தம்புது வாசம்
தென்றல்கூட சங்கீத மாய் வீசும்
ஏதோ வந்து பன்னீர்மழை தூவும்
யாரோ என்று எங்கோ மனம் தேடும்

கேட்காத ஓசைகள் - இதழ் 
தாண்டாத வார்த்தைகள் - இமை 
ஆடாத பார்வைகள் - இவை 
நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம் - இல்லை 
நில் என்னும் ஓர் நெஞ்சம் - எதிர்
பார்க்காமல் என் வாழ்வில் - ஒரு 
போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா
துடிப்பதுபோல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய்த் தவித்திடவா

ஒரு 
பெண்ணின் நினைவென்ன செய்யும் - எனைக் 
கத்தி இல்லாமல் கொய்யும் - இதில் 
மீள வழி உள்ளதே - இருப்பினும் 
உள்ளம் விரும்பாது ஓ ஏ

(விழிகளின் அருகினில் வானம்)

No comments:

Post a Comment