படம்: அழகிய தீயே
பாடல்:
இசை: இரமேஷ் விநாயகம்
பாடியவர்: இரமேஷ் விநாயகம்
ஆண்டு: 2004
விழிகளின் அருகினில் வானம் - வெகு
தொலைவினில் தொலைவினில் தூக்கம் - இது
ஐந்து புலன்களின் ஏக்கம் - என்
முதன்முதல் அனுபவம் ஓ ஏ
ஒலியின்றி உதடுகள் பேசும் - பெரும்
புயலென வெளிவரும் சுவாசம் - ஒரு
சுவடின்றி நடந்திடும் பாதம் - இது
அதிசய அனுபவம் ஓ ஏ
பெண்ணைச் சந்தித்தேன் - அவள்
நட்பை யாசித்தேன் - அவள்
பண்பை நேசித்தேன் - வேறு
என்ன நான் சொல்ல ஓ ஏ
பூப்போன்ற கன்னித்தேன் - அவள்
பாடல்:
இசை: இரமேஷ் விநாயகம்
பாடியவர்: இரமேஷ் விநாயகம்
ஆண்டு: 2004
விழிகளின் அருகினில் வானம் - வெகு
தொலைவினில் தொலைவினில் தூக்கம் - இது
ஐந்து புலன்களின் ஏக்கம் - என்
முதன்முதல் அனுபவம் ஓ ஏ
ஒலியின்றி உதடுகள் பேசும் - பெரும்
புயலென வெளிவரும் சுவாசம் - ஒரு
சுவடின்றி நடந்திடும் பாதம் - இது
அதிசய அனுபவம் ஓ ஏ
பெண்ணைச் சந்தித்தேன் - அவள்
நட்பை யாசித்தேன் - அவள்
பண்பை நேசித்தேன் - வேறு
என்ன நான் சொல்ல ஓ ஏ
பூப்போன்ற கன்னித்தேன் - அவள்
பேர் சொல்லி தித்தித்தேன் - அது
ஏன் என்று யோசித்தேன் - அட
நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள் - இசை
வார்க்கின்ற நேரங்கள் - பசி
நீர் தூக்கம் இல்லாமல் - உயிர்
வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய்ச் செயல்படுதே
விழி
காண முடியாத மாற்றம் - அதை
மூடி மறைக்கின்ற தோற்றம் - ஒரு
மெளனப் புயல் வீசுதே - அதில்
மனம் தட்டு தடுமாறும் ஓ ஏ
பூவில் என்ன புத்தம்புது வாசம்
தென்றல்கூட சங்கீத மாய் வீசும்
ஏதோ வந்து பன்னீர்மழை தூவும்
யாரோ என்று எங்கோ மனம் தேடும்
கேட்காத ஓசைகள் - இதழ்
தாண்டாத வார்த்தைகள் - இமை
ஆடாத பார்வைகள் - இவை
நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம் - இல்லை
நில் என்னும் ஓர் நெஞ்சம் - எதிர்
பார்க்காமல் என் வாழ்வில் - ஒரு
போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பதுபோல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய்த் தவித்திடவா
ஒரு
பெண்ணின் நினைவென்ன செய்யும் - எனைக்
கத்தி இல்லாமல் கொய்யும் - இதில்
மீள வழி உள்ளதே - இருப்பினும்
உள்ளம் விரும்பாது ஓ ஏ
(விழிகளின் அருகினில் வானம்)
ஏன் என்று யோசித்தேன் - அட
நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள் - இசை
வார்க்கின்ற நேரங்கள் - பசி
நீர் தூக்கம் இல்லாமல் - உயிர்
வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய்ச் செயல்படுதே
விழி
காண முடியாத மாற்றம் - அதை
மூடி மறைக்கின்ற தோற்றம் - ஒரு
மெளனப் புயல் வீசுதே - அதில்
மனம் தட்டு தடுமாறும் ஓ ஏ
பூவில் என்ன புத்தம்புது வாசம்
தென்றல்கூட சங்கீத மாய் வீசும்
ஏதோ வந்து பன்னீர்மழை தூவும்
யாரோ என்று எங்கோ மனம் தேடும்
கேட்காத ஓசைகள் - இதழ்
தாண்டாத வார்த்தைகள் - இமை
ஆடாத பார்வைகள் - இவை
நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம் - இல்லை
நில் என்னும் ஓர் நெஞ்சம் - எதிர்
பார்க்காமல் என் வாழ்வில் - ஒரு
போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பதுபோல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய்த் தவித்திடவா
ஒரு
பெண்ணின் நினைவென்ன செய்யும் - எனைக்
கத்தி இல்லாமல் கொய்யும் - இதில்
மீள வழி உள்ளதே - இருப்பினும்
உள்ளம் விரும்பாது ஓ ஏ
(விழிகளின் அருகினில் வானம்)
No comments:
Post a Comment