Sunday, July 6, 2014

சின்ன சின்ன ரோஜாப் பூவே

படம் : பூவிழி வாசலிலே
இசை : இளையராஜா
பாடியவர் : KJ இயேசுதாஸ்
ஆண்டு : 1987

சின்ன சின்ன ரோஜாப் பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு
சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக் கொள்ளத் தாயும் இல்லை


ஏனோ சோதனை - இள
நெஞ்சில் வேதனை                                    (சின்ன சின்ன)


சின்ன பிஞ்சு நெஞ்சுக் குள்ளே
என்ன என்ன ஆசை யுண்டோ
உள்ளம் தன்னை மூடி வைத்த
தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை


நீயும் இனி நானும்
ஒரு ஜீவன் தானடா


சோலைக் கிளி போலே
என் தோளில் ஆடடா


இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்                           (சின்ன சின்ன)


கண்ணில் உன்னைக் காணும் போது
எண்ணம் எங்கோ போகு தையா
என்னை விட்டுப் போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்த தென்று எண்ணு கின்றேன்
வாழ்த்து சொல்லிப் பாடு கின்றேன்


கங்கை நீ என்றால்
கரை இங்கு நானடா


வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா


என் வாழ்வில் நிம்மதி - அது 
உந்தன் சன்னதி                                         (சின்ன சின்ன)

No comments:

Post a Comment