வினைபல வலியி னாலே
வேறுவேறி யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள்
துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய தாகும்
தோன்றுதல் தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும்
செல்வமும் அன்ன தேயாம்
உயர்குடி நனியுள் தோன்றல்
ஊனமில் யாக்கை யாதல்
மயர்வறு கல்வி கேள்வித்
தன்மையால் வல்ல ராதல்
பெரிதுணர் அறிவே யாதல்
பேரறம் கோடல் என்றாங்
கரிதிவை பெறுதல் ஏடா
பெற்றவர் மக்கள் என்பார்
---------------------------------------------------------
அரியது கேட்கின் வரிவடிவேலோய்!
அரிது அரிது மானிடராதல் அரிது!
மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறந்தகாலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது!
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!
வேறுவேறி யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள்
துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய தாகும்
தோன்றுதல் தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும்
செல்வமும் அன்ன தேயாம்
உயர்குடி நனியுள் தோன்றல்
ஊனமில் யாக்கை யாதல்
மயர்வறு கல்வி கேள்வித்
தன்மையால் வல்ல ராதல்
பெரிதுணர் அறிவே யாதல்
பேரறம் கோடல் என்றாங்
கரிதிவை பெறுதல் ஏடா
பெற்றவர் மக்கள் என்பார்
---------------------------------------------------------
அரியது கேட்கின் வரிவடிவேலோய்!
அரிது அரிது மானிடராதல் அரிது!
மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறந்தகாலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது!
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!
No comments:
Post a Comment