தங்கமே தாமரை மொட்டுக ளாகித் தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!
அடிபெருத்து நுனிகுவிந்த பனிமலை யின்மேல்
முடிகருத்த கார்முகிலே மொய்த்திடும் போதில்
படையெடுத்தே வானுலகோர் பார்த்து மகிழ்வார்
உடைநெகிழ்ந்த பூமகளின் உடலழ கென்றே!
பண்பட்ட நெஞ்சிலே புண்பட்டதோ என்ன துன்புற்றதோ?
விண்பட்ட புகழிலே கறைபட்டதோ நீதி விழியற்றதோ?
அன்புற்ற நட்பிலே கண்பட்டதோ? நேசம் அழிவுற்றதோ?
இன்புற்ற காளியின் அருள்பட்டதே! இன்னல் முடிவுற்றதே!
நேயக் கவிக்குயிலே! நீயிருந்த பூங்கிளையைக்
காயவைத்துப் போனதென்ன காரணமோ? - நீயறியப்
பொல்லாப் பழிகூறும் பொய்யர் விழியெதிரில்
நில்லா திருக்க நினைத்து.
பிறப்புற்றேன் காளியிடம் பேரன் புற்றேன்
பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன் செல்வத்தின் வளமும் பெற்றேன்
மன்னரொடும் சரிசமமாய் மகிழும் வண்ணம்
சிறப்புற்றேன் காதல்மணம் சேர்க்க வந்த
சிறுமதியாள் பழிச்சொல்லைச் செவியுற் றேன்நான்
வெறுப்புற்றேன் வாழ்வினிலே விரக்தி யுற்றேன்
விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீவா!
அறியாத மாந்தர்களே! சாவைக் கண்டு
அஞ்சிடுவார் அழுதிடுவார்! ஆத்மீ கத்தின்
கரைகாணும் ஞானியரோ உயிருக் கென்றும்
அழிவில்லை என்றெண்ணி இருப்ப துண்டு
முறையான பெரும்பணியான் சாத னைகள்
முடிப்பவரோ புகழுடலாய் நிலைப்ப துண்டு
கறையான பழையஉடல் களைந்தே மீண்டும்
கலங்கமில்லாக் குழந்தைகளாய்ப் பிறப்போம் வாராய்!
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!
அடிபெருத்து நுனிகுவிந்த பனிமலை யின்மேல்
முடிகருத்த கார்முகிலே மொய்த்திடும் போதில்
படையெடுத்தே வானுலகோர் பார்த்து மகிழ்வார்
உடைநெகிழ்ந்த பூமகளின் உடலழ கென்றே!
பண்பட்ட நெஞ்சிலே புண்பட்டதோ என்ன துன்புற்றதோ?
விண்பட்ட புகழிலே கறைபட்டதோ நீதி விழியற்றதோ?
அன்புற்ற நட்பிலே கண்பட்டதோ? நேசம் அழிவுற்றதோ?
இன்புற்ற காளியின் அருள்பட்டதே! இன்னல் முடிவுற்றதே!
நேயக் கவிக்குயிலே! நீயிருந்த பூங்கிளையைக்
காயவைத்துப் போனதென்ன காரணமோ? - நீயறியப்
பொல்லாப் பழிகூறும் பொய்யர் விழியெதிரில்
நில்லா திருக்க நினைத்து.
பிறப்புற்றேன் காளியிடம் பேரன் புற்றேன்
பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன் செல்வத்தின் வளமும் பெற்றேன்
மன்னரொடும் சரிசமமாய் மகிழும் வண்ணம்
சிறப்புற்றேன் காதல்மணம் சேர்க்க வந்த
சிறுமதியாள் பழிச்சொல்லைச் செவியுற் றேன்நான்
வெறுப்புற்றேன் வாழ்வினிலே விரக்தி யுற்றேன்
விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீவா!
அறியாத மாந்தர்களே! சாவைக் கண்டு
அஞ்சிடுவார் அழுதிடுவார்! ஆத்மீ கத்தின்
கரைகாணும் ஞானியரோ உயிருக் கென்றும்
அழிவில்லை என்றெண்ணி இருப்ப துண்டு
முறையான பெரும்பணியான் சாத னைகள்
முடிப்பவரோ புகழுடலாய் நிலைப்ப துண்டு
கறையான பழையஉடல் களைந்தே மீண்டும்
கலங்கமில்லாக் குழந்தைகளாய்ப் பிறப்போம் வாராய்!
No comments:
Post a Comment