Sunday, September 25, 2011

மான் வரக் கண்டதுண்டோ?

படம்: ஶ்ரீவள்ளி
பாடியவர்: டி.ஆர். மகாலிங்கம்

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே புல்
மேயாத மான் புள்ளி மேவாத மான் நல்ல சாதிமான்
சாயாத கொம்பிரண்டிருந்தாலும் அது தலைநிமிர்ந்து
பாயாத மான் அம்மானைத் தேடிவந்தேன் ஆரணங்கே!
-----------------------------------------------------------------------------------
காயாத கானகத்தே நின்றுலாவும்
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே!
மேயாத மான்! மேயாத மான்! மேயாத மான்!
மேயாத மான்! - புள்ளி மேவாத மான்!
மேயாத மான்!

மேவும் கானடைந்து
நறுசந்தன மும்புனு குங்கமழும்
நறுசந்தன மும்புனு குங்கமழும் - கல
வஞ்ச லணிந்து சுணங்கிப் படர்ந்திடும்
மேயாத மான்!

மேயாத மான்! புள்ளி மேவாத மான்!
மேயாத மான்!

கானக் குறவர் கண்மணி எனவளர்
கானக் குயிலின் நிகர்குரல் உடையது!
மேயாத மேயாத மான்!

தேனும் பாகும் தினைமாவும்
தேனும் பாகும் தினைமாவும்
தின்பதல்லால் புல் ஒருபோதும்
மேயாத மான்!

சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும்
சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் அது தலை நிமிர்ந்து
பாயாத மான்!

மான் வரக் கண்டதுண்டோ? - ஒரு
மான் வரக் கண்டதுண்டோ? - பசும்
புல்போலே நல்மேனி சுணங்கிடக்
குமிழ்தமிழ் - அழகிய
மான் வரக் கண்டதுண்டோ ?

No comments:

Post a Comment