Saturday, December 24, 2011

அம்பிகாபதி திரைப்படத்திலிருந்து பெறப்பட்ட கவிகள்

அம்பிகாபதி அமராவதிக்கு எழுதும் கடித ஓலை

அன்பே அமரா!
ஆடற் கலைமயிலே அரண்மனைப் பூங்குயிலே
பாடல் இலக்கணமே பைங்கிளியே

தூண்டிற் புழுவாக்கி என்னைத் தவிக்கவைத்து
மீண்டும் வரமாட்டேன் என்று விளம்பிவிட்டாய்

வேடிக்கை ஊடல் விளையாட்டு என்று எண்ணினேன்
வினையென்றுணர்ந்தேன் இன்று விழிநீரில் நீந்துகின்றேன்

மறக்கலா மென்றாலோ மனதைத்தான் நீதிருடி
திறக்கவொண்ணாக் கூட்டுக்குள் சிறைவைத்துவிட்டாய்

அல்லும் பகலுமெனை அணுவணுவாய் வதைக்காதே
கொல்லும் மருந்திருந்தால் கொண்டுவந்து தந்துவிடு

----------------------------------------------

அம்பிகாபதி, அமராவதியை நினைத்துப் பாடுவது

அம்புலியைக் குழம்பாக்கி
அரவிந்த இரசமோடு அமுதும் சேர்த்து
இன்பநிறை முகமாக்கிக்

கயலிரண்டைக் கண்ணாக்கி
மன்னன் ஈந்த பைங்கிளியே!
அயலொருவர் கண்படுமோ என்றஞ்சி
பயத்தோடுன்னை கங்குலிலே காண்பதல்லால்
கணப்பொழுதும் இணைபிரியாக் காலம் என்றோ?

--------------------------------------------

அம்பிகாபதி, அமராவதியைப் பார்த்துப் பாடும் முதலிரண்டு வரிகளின்
பொருள் மாறுபடுமாறு, அடுத்த ஈரடிகளைக் கோர்த்துக் கொட்டிக் கிழங்கு விற்கும் கிழவியை நினைத்துக் கம்பர் பாடுவது

இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்
--------------------------------------------

பேரின்பப் பாடல்கள் நூறு பாட வேண்டும் என்ற சவாலை ஏற்று, அம்பிகாபதி பாடுவதாக அமைந்தது

சிந்தனை செய் மனமே - தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே


சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே

அருமறை பரவிய சரவண பவகுகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே

சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...                                            (1)


வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார்செந் தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை


நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில்சூழும்

தணிகை வாழும் பரம ஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை


தமிழ்மாலை தனைச்சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர்மாலை ஜெபமாலை யுடன்சந்தத்
தமிழ்மாலை தனைச்சூடுவான்


தாபமிகு வெப்பு வாதமொடு பித்த
மானபிணி மொய்த்து உடம்போடுசாருமுயிர் துன்ப சாகரமு ழன்று
சாதனைஇ ழந்து வருந்தாமுன்தாளை யளித்திட வேணு மெனத்துதி
பாடருண கிரிநாத னழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர்மாலை ஜெபமாலை யுடன்சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்                                                      (2)


சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூச லாட துவர்கொள் செவ்வாய்
நற்றே னொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே               (3)

மகாகவி காளிதாஸ் திரைப்படத்திலிருந்து பெறப்பட்ட கவிகள்

தங்கமே தாமரை மொட்டுக ளாகித் தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே!

அடிபெருத்து நுனிகுவிந்த பனிமலை யின்மேல்
முடிகருத்த கார்முகிலே மொய்த்திடும் போதில்
படையெடுத்தே வானுலகோர் பார்த்து மகிழ்வார்
உடைநெகிழ்ந்த பூமகளின் உடலழ கென்றே!

பண்பட்ட நெஞ்சிலே புண்பட்டதோ என்ன துன்புற்றதோ?
விண்பட்ட புகழிலே கறைபட்டதோ நீதி விழியற்றதோ?
அன்புற்ற நட்பிலே கண்பட்டதோ? நேசம் அழிவுற்றதோ?
இன்புற்ற காளியின் அருள்பட்டதே! இன்னல் முடிவுற்றதே!

நேயக் கவிக்குயிலே! நீயிருந்த பூங்கிளையைக்
காயவைத்துப் போனதென்ன காரணமோ? - நீயறியப்
பொல்லாப் பழிகூறும் பொய்யர் விழியெதிரில்
நில்லா திருக்க நினைத்து.

பிறப்புற்றேன் காளியிடம் பேரன் புற்றேன்
   பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன் செல்வத்தின் வளமும் பெற்றேன்
   மன்னரொடும் சரிசமமாய் மகிழும் வண்ணம்
சிறப்புற்றேன் காதல்மணம் சேர்க்க வந்த
   சிறுமதியாள் பழிச்சொல்லைச் செவியுற் றேன்நான்
வெறுப்புற்றேன் வாழ்வினிலே விரக்தி யுற்றேன்
   விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீவா!

அறியாத மாந்தர்களே! சாவைக் கண்டு
   அஞ்சிடுவார் அழுதிடுவார்! ஆத்மீ கத்தின்
கரைகாணும் ஞானியரோ உயிருக் கென்றும்
   அழிவில்லை என்றெண்ணி இருப்ப துண்டு
முறையான பெரும்பணியான் சாத னைகள்
   முடிப்பவரோ புகழுடலாய் நிலைப்ப துண்டு
கறையான பழையஉடல் களைந்தே மீண்டும்
   கலங்கமில்லாக் குழந்தைகளாய்ப் பிறப்போம் வாராய்!

Monday, October 17, 2011

வளையாபதியின் வடிப்பு வேலனின் கேள்வியாய்...

வினைபல வலியி னாலே 
  வேறுவேறி யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள்
  துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரிய தாகும்
  தோன்றுதல் தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும்
  செல்வமும் அன்ன தேயாம்

உயர்குடி நனியுள் தோன்றல்
  ஊனமில் யாக்கை யாதல்
மயர்வறு கல்வி கேள்வித்
  தன்மையால் வல்ல ராதல்
பெரிதுணர் அறிவே யாதல்
  பேரறம் கோடல் என்றாங்
கரிதிவை பெறுதல் ஏடா
  பெற்றவர் மக்கள் என்பார்
---------------------------------------------------------
அரியது கேட்கின் வரிவடிவேலோய்! 
அரிது அரிது மானிடராதல் அரிது!

மானிடராயினும் 
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!

கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறந்தகாலையும் 
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!

ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான் செய்தலரிது!

தானமும் தவமும் தான் செய்ததாயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே!

Sunday, September 25, 2011

மான் வரக் கண்டதுண்டோ?

படம்: ஶ்ரீவள்ளி
பாடியவர்: டி.ஆர். மகாலிங்கம்

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே புல்
மேயாத மான் புள்ளி மேவாத மான் நல்ல சாதிமான்
சாயாத கொம்பிரண்டிருந்தாலும் அது தலைநிமிர்ந்து
பாயாத மான் அம்மானைத் தேடிவந்தேன் ஆரணங்கே!
-----------------------------------------------------------------------------------
காயாத கானகத்தே நின்றுலாவும்
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே!
மேயாத மான்! மேயாத மான்! மேயாத மான்!
மேயாத மான்! - புள்ளி மேவாத மான்!
மேயாத மான்!

மேவும் கானடைந்து
நறுசந்தன மும்புனு குங்கமழும்
நறுசந்தன மும்புனு குங்கமழும் - கல
வஞ்ச லணிந்து சுணங்கிப் படர்ந்திடும்
மேயாத மான்!

மேயாத மான்! புள்ளி மேவாத மான்!
மேயாத மான்!

கானக் குறவர் கண்மணி எனவளர்
கானக் குயிலின் நிகர்குரல் உடையது!
மேயாத மேயாத மான்!

தேனும் பாகும் தினைமாவும்
தேனும் பாகும் தினைமாவும்
தின்பதல்லால் புல் ஒருபோதும்
மேயாத மான்!

சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும்
சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் அது தலை நிமிர்ந்து
பாயாத மான்!

மான் வரக் கண்டதுண்டோ? - ஒரு
மான் வரக் கண்டதுண்டோ? - பசும்
புல்போலே நல்மேனி சுணங்கிடக்
குமிழ்தமிழ் - அழகிய
மான் வரக் கண்டதுண்டோ ?

Sunday, September 18, 2011

நக்கீரனா? நமசிவாயனா?

நமசிவாயன் கூற்று:
அங்கம் வளர்க்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
கீருகீர் என்றுஅறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

நக்கீரன் கூற்று:
சங்கறுப்ப(து) எங்க(ள்)குலம் சங்கரர்க்(கு)அங்(கு) ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி

Friday, July 1, 2011

அரியது கேட்கின்...

படம்: கந்தன் கருணை
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

அரியது கேட்கின் வரிவடிவேலோய்!
அரிது அரிது மானிடராதல் அரிது!
மானிடராயினும் 
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது!
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது!
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது!
அதனினும் கொடிது இளமையில் வறுமை!
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்!
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்!
அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே!

இனியது கேட்கின் தனிநெடுவேலோய்! இனிது இனிது ஏகாந்தம் இனிது!
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே!

என்றும் புதியது 
பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் 
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னைப் பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது

Wednesday, June 29, 2011

பழம் நீயப்பா...

படம்: திருவிளையாடல்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த

முருகா..! 
நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..! 
உனக்கென்ன விதம் இக்கனியை
நாமீவது என்று நாணித்தான்

முருகா! 
நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்! 
உனக்கென்ன விதமிக்கனியை
நாமீவது என்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா
நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ! 
உனக்கென்ன விதமிக்கனியை
நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!

அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் நீ! 
உனக்கென்ன விதமிக்கனியை
நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!

வேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...

சக்தி வடி
வேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

வடி
வேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடி
வேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ? - முருகா
உனக்குக் குறையுமுளதோ?

வடி
வேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடி
வேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ? - முருகா
உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் 
தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ...
ஏனிப்படிக் கோவணத்தொடும் 
தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

எமது வினை பொடிபடவும் அல்லவோ 
வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!
என் ஆசான் 
அப்பன் 
அம்மையாம் என்னவும் எண்ணினேன்
தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட 
சங்கரன் கும்பிடும் 
என் தண்டபாணி..!
தண்டாபாணி தண்டபாணி 
தண்டபாணித் தெய்வமே..!

பழம் நீயப்பா! - ஞானப் 
பழம் நீயப்பா!! - தமிழ் ஞானப்
பழம் நீயப்பா..!!!

பழம் நீயப்பா! - ஞானப்
பழம் நீயப்பா!! - தமிழ் ஞானப்
பழம் நீயப்பா..!!!

சபைதன்னில் - திருச்
சபைதன்னில் 
உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழம் நீயப்பா! - ஞானப்
பழம் நீயப்பா!! - தமிழ் ஞானப்
பழம் நீயப்பா..!!!

கண்ணொன்றில் கனலாய் வந்தாய்! - நெற்றிக்
கண்ணொன்றில் கனலாய் வந்தாய்! - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்! - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்!
கார்த்திகைப் பெண்பால் உண்டாய்! - திருக்
கார்த்திகைப் பெண்பாலுண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு..!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு! மனம் உண்டு..!!
அன்புள்ள தந்தைக்குத்
தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின்
தமிழுக்கு உரிமை உண்டு..!

ஆறுவது சினம் கூறுவது தமிழ்..
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம்..
தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!!
இன்முகம் காட்டவா நீ..!!!
ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்..
என்னுடன் ஓடி வா நீ..!