Friday, August 30, 2013

காலத்தில் அழியாத...

படம்: மகாகவி காளிதாஸ்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

காலத்தில் அழியாத காவியம் தரவந்த
மாபெரும் கவி மன்னனே - உனக்குத்
தாயொரு மொழி சொல்லுவேன்


உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா - மகனே
சந்தனம் சேறாகுமா?

பல்லக்குப் பரிவாரம் படையுடன் முடியுந்தன்
சொல்லுக்கு விலையாகுமே - மகனே உன்
தோளுக்குள் புவி ஆளுமே


ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே - மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது - அதில் தான்
சரித்திரம் நிகழ்கின்றது


யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அதுவரை பொறுப்பாயடா - மகனே என்
அருகினில் இருப்பாயடா

No comments:

Post a Comment