Friday, August 30, 2013

ஏழுமலையான்

பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணம் கருணை நம்மை மகிழவைத்தது



ஒருபிடி அவல்கொடுத்தே குசேலன் உறவுகொண்டான்
ஓடத்தில் ஏற்றிவைத்தே குகன்உடன் பிறப்பானான்
தான்சுவைத்த பழங்களையே தந்தனள் தாய்சபரி
தருவதற் கொன்றுமில்லை தலைவனே எமையாதரி

காலத்தில் அழியாத...

படம்: மகாகவி காளிதாஸ்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

காலத்தில் அழியாத காவியம் தரவந்த
மாபெரும் கவி மன்னனே - உனக்குத்
தாயொரு மொழி சொல்லுவேன்


உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா - மகனே
சந்தனம் சேறாகுமா?

பல்லக்குப் பரிவாரம் படையுடன் முடியுந்தன்
சொல்லுக்கு விலையாகுமே - மகனே உன்
தோளுக்குள் புவி ஆளுமே


ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே - மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது - அதில் தான்
சரித்திரம் நிகழ்கின்றது


யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அதுவரை பொறுப்பாயடா - மகனே என்
அருகினில் இருப்பாயடா