Friday, July 18, 2014

காதல் தேவதையே

படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள் : SP பாலசுப்பிரமணியம், ஜானகி
ஆண்டு : 1980

ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ்மகனின் பொன்னே சிலையே               (ஜெர்மனியின்)


காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்                                             (ஜெர்மனியின்)


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே


காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்                                                    (சித்திரமே..)


பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடுநீ - இனி
எந்நாளுமே கொண்டாடலாம்


குளிர்நிலவின் ஒளிநீயே
எனதன்பின் சுடர் நீயே

சுகம் நூறாக வேண்டும்

உன்தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்                         (ஜெர்மனியின்)


பேரின்பமே என்றாலென்ன - அதை
நீஎன்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீஎன்னிடம் தந்தாலென்ன


எனைஅணைத்தே கதைசொல்ல
அதைச்சொல்வேன் சுவையாக


வெகுநாளாக ஆசை
என்மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்                           
(சித்திரமே) 

(ஜெர்மனியின்)

Sunday, July 6, 2014

சின்ன சின்ன ரோஜாப் பூவே

படம் : பூவிழி வாசலிலே
இசை : இளையராஜா
பாடியவர் : KJ இயேசுதாஸ்
ஆண்டு : 1987

சின்ன சின்ன ரோஜாப் பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு
சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக் கொள்ளத் தாயும் இல்லை


ஏனோ சோதனை - இள
நெஞ்சில் வேதனை                                    (சின்ன சின்ன)


சின்ன பிஞ்சு நெஞ்சுக் குள்ளே
என்ன என்ன ஆசை யுண்டோ
உள்ளம் தன்னை மூடி வைத்த
தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை


நீயும் இனி நானும்
ஒரு ஜீவன் தானடா


சோலைக் கிளி போலே
என் தோளில் ஆடடா


இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்                           (சின்ன சின்ன)


கண்ணில் உன்னைக் காணும் போது
எண்ணம் எங்கோ போகு தையா
என்னை விட்டுப் போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்த தென்று எண்ணு கின்றேன்
வாழ்த்து சொல்லிப் பாடு கின்றேன்


கங்கை நீ என்றால்
கரை இங்கு நானடா


வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா


என் வாழ்வில் நிம்மதி - அது 
உந்தன் சன்னதி                                         (சின்ன சின்ன)

Friday, February 28, 2014

ஒன்றானவன்

படம்: திருவிளையாடல்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்

ஒன்றானவன் 
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரஸ வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவான்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன் - அன்பின்
ஒளியாகி நின்றானவன்