Tuesday, April 24, 2012

இல்லாத தொன்றில்லை

படம்: திருவிளையாடல்
பாடியவர்: டி.ஆர். மகாலிங்கம்

இல்லாத தொன்றில்லை எல்லாமும் நீயென்று
     சொல்லாமல் சொல்லிவைத்தாய்!
புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி

      புவியாகி வாழவைத்தாய்!
சொல்லாலும் மனதாலும் சுடர்கொண்டு தொழுவோரை

      மென்மேலும் உயரவைத்தாய்!
கல்லான உருவமும் கனிவான உள்ளமும்

      வடிவான சதுர்வேதனே!
கருணைபொழி மதுரையில் தமிழுலகம் வாழவே

     கண்கொண்ட சிவநாதனே!

No comments:

Post a Comment