Monday, April 30, 2012

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால்

பாடியவர் :  எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.சி.வசந்தகோகிலம்

தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தால் 
என்ன சொல்வேன் பெண்மயிலே?
தப்பெடுக்கும் தொழில் எங்களுக்கில்லை
கோபமுமேன் கரவாவிழியே?
பேசுவதே கோபமென்றால் என்செய்வேன்?

சாந்தமே கோமள மானே! - சத்குண 
சாந்தமே கோமள மானே!
போதுமே பரிகாசம்
இனி போதுமே பிடிவாதம்
போதுமே பரிகாசம்
நிஜ அன்பே பேரின்பம்

வண்டார் குழலாள்

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

வண்டார் குழலாள் உமையாள் பூங்கரத்தால் வருடும் பாதம்
தொண்டர் பணிக்குப் பரவைமனை தூது நடந்த திருப்பாதம்
விண்ட அடியார்க்கு உளம்கனிந்து பரிந்து வீடுதரும் பாதம்
கொண்ட நடனத் திருப்பாதம் தொண்டருள்ளத் திருந்தேனே

Tuesday, April 24, 2012

இல்லாத தொன்றில்லை

படம்: திருவிளையாடல்
பாடியவர்: டி.ஆர். மகாலிங்கம்

இல்லாத தொன்றில்லை எல்லாமும் நீயென்று
     சொல்லாமல் சொல்லிவைத்தாய்!
புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி

      புவியாகி வாழவைத்தாய்!
சொல்லாலும் மனதாலும் சுடர்கொண்டு தொழுவோரை

      மென்மேலும் உயரவைத்தாய்!
கல்லான உருவமும் கனிவான உள்ளமும்

      வடிவான சதுர்வேதனே!
கருணைபொழி மதுரையில் தமிழுலகம் வாழவே

     கண்கொண்ட சிவநாதனே!