ஞான பண்டிதா முருகா பால குமரனே
உருகி வேண்டினோம் முருகா உந்தன் அருள்கொடுவிழிதிறக்குமே முருகா ஒளிபிறக்குமே
வலிபறக்குமே முருகா வழிகிடைக்குமே
வேலெடுத்தவன் முருகன் வினையறுப்பவன்
கால்பிடிப்பவர் கவலைக் களையெடுப்பவன்
நீயிருக்கையில் இந்த நிலையும் நியாயமோ
தாயிருக்கையில் பிள்ளை தவறி வீழுமோ
பால்கொடுத்தவள் முருகா பாசம் கேட்கிறாள்
பாலகா குகா மடியில் சேர்க்கப் பார்க்கிறாள்
அன்பு சிவனவன் முருகா கோபம் கொள்கிறான்
நீல கண்டனின் மகனே நியலில் சேரவா
பிறைகள் இல்லையேல் முருகா நிலவு ஏதடா
குறைகள் உள்ளது மனித உறவு தானடா
நிறைந்து வையுமென் நெஞ்சம் முழுதும் நீயடா
நீஎன் வாழ்வினை நிலையாய் ஒன்று சேரடா
காற்று மண்டலம் கந்தன் கான மண்டபம்
ஏற்றுக் கொள்ளடா எந்தாய் இளைய வள்தவம்
காற்று வெள்ளமாய் உந்தன் காலில் விழுகிறேன்
போற்றும் தெய்வமே புனிதா புரிந்து கொள்ளடா